பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 4: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி ஜீவா நகரில் பழுதடைந்த நிலையில் இருக்கும் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மெணசி ஜீவா நகர் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, ஜீவா நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், நிழற்கூடத்தின் மேற்கூரைகள் சிதிலமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.