காரிமங்கலம் அருகே அர்ச்சுனன் தபசு நாடகம்

காரிமங்கலம், ஜூன் 4: காரிமங்கலம் அருகே பூலாப்பட்டியில், மழை பெய்ய வேண்டி அர்ச்சுனன் தபசு நாடகம் நடத்தப்பட்டது.

காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பூலாப்பட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயிலில், மழை பெய்ய வேண்டி கிராம பொதுமக்கள் சார்பில், கடந்த மாதம் அர்ச்சுனன் தபசு நாடகம் தொடங்கியது. 21ம் நாளான நேற்று அர்ச்சுனன் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதி நாளான நாளை(5ம் தேதி) சுவாமி திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மழை வேண்டி அர்ச்சுனன் தபசு நாடகம் நடந்து வரும் நிலையில், காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: