திருச்சி, மே 29: கரூர் வைஸ்யா வங்கி சார்பில் இந்திய ராணுவ நல்வாழ்வின் கூட்டாண்மை சமூக பொறுப்பு பண்ட்டிற்காக ரூ.5 கோடி வழங்கியது. இதற்கான தொகையை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சேஷாத்ரி, டெல்லியில் இந்திய ராணுவ ஜெனரல் விபின் ராவத்திடம் கடந்த 22ம் தேதி வழங்கினார். இதுகுறித்து கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சேஷாத்ரி கூறுகையில், நாட்டின் பாதுகாப்பிற்கு இந்திய ராணுவம் சிறந்த சேவை ஆற்றி வருகிறது. இதற்காக வங்கி சார்பில் இந்த தொகை வழங்கப்படுகிறது. மேலும் ராணுவத்தினர் நமது எல்லையில் பாதுகாப்பில் ஈடுபடுவதால் மக்கள் முழுமையான பாதுகாப்பான வாழ்வும், அமைதியான வாழ்க்கையை வாழுவதற்கு உங்கள் அர்ப்பணிப்பு முக்கியமானதாக உள்ளது என்றார்.