ஞானதிரவியத்திற்கு சொந்த ஊரில் வரவேற்பு

வள்ளியூர்,  மே 24:  நெல்லை மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு சொந்த ஊரான ஆவரைகுளத்திற்கு  வருகை தந்த திமுக வேட்பாளர்  ஞானதிரவியத்திற்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், ராதாபுரம் ஒன்றியச் செயலாளர்  வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் எரிக் ஜூடு,  இளைஞர் அணி  மாவட்ட துணை அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்  பெல்சி, இளைஞர் அணி பணகுடி நகர அமைப்பாளர் கோபி என்ற கோபால கண்ணன்  உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், மீனவ மக்கள், வியாபாரிகள் சங்கத்தினர் என திரளானோர் பங்கேற்றனர்.

வள்ளியூர்:  முன்னதாக ஞானதிரவியத்திற்கு வள்ளியூரில் அனைத்து கட்சியினர் மற்றும் வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் மாவட்டப் பிரதிநிதி காதர் மைதீன், ஆச்சியூர் ராமசாமி, சி.பா. மூர்த்தி, அன்பரசு, பேருர் செயலாளர்கள் நயினார்,  பேபி ஷகிலா, மாநில பேச்சாளர் பனிபாஸ்கர், ஒன்றிய அவைத்தலைவர் சிவராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணை பொருளாளர் லட்சுமணன், வர்த்தக அணி ரவி, 18வது வார்டு சுரேஷ், பேரூர் அமைப்பாளர் தில்லைராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு பொது அமைப்பாளர் சுரேஷ்பாக்கியம், இளைஞர் அணி மாடசாமி, ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் பன்னீர் செல்வம், சேவியர், ஆலோசகர் தவசிராஜன், மனிதநேய மக்கள்  கட்சி மாவட்ட துணைச்செயலாளர் தாவூத், காங்கிரஸ் நகரத் தலைவர் சீராக் இசக்கியப்பன், மாவட்டச் செயலாளர் முத்துசாமி, முன்னாள் கவுன்சில் சசி, மாவட்டச் செயலாளர் குமாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், நகர துணைச் செயலாளர் சந்தானமுத்து, விசிக மாவட்டச் செயலாளர் சுந்தர், மாவட்ட பொருளாளர் சசிகுமார், நகரச் செயலாளர் பேரின்பராஜ், ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணன்   மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: