சிங்காநல்லூரில் கான்ட்ராக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை, மே 23:கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் உள்ள பங்காரு லே-அவுட்டை சேர்ந்தவர் பிரபு(36). பில்டிங் கான்ட்ராக்டர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சீரடி சாய்பாபா கோயிலுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று விட்டார். பின்னர் நேற்று முன் தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 10 ஆயிரம் ரொக்கம், 20 பவுன் நகை, ஒரு வெள்ளி குத்து விளக்கு, ஒரு லேப்டாப் ஆகியன திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பிரபு சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: