மழை வேண்டி சிறப்பு யாகம்

தர்மபுரி, மே 22:  தர்மபுரி குமாரசாமிபேட்டை, சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பல்வேறு கோயில்களில் மழை வேண்டி யாகம் நடந்து வருகிறது. இதன்படி நேற்று தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. காலை 9.30 மணிக்கு பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி, நீர் தொட்டி கட்டி அதில் அர்ச்சகர்கள் அமர்ந்து 108 முறை வருண மந்திரத்தை சொல்லி சிறப்பு வழிபாடு நடந்து. இதே போல் நாதஸ்வரத்தில் அதிர்தவர்ஷி, கேதாரி, ஆனந்தபைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Related Stories: