பாளையஞ்செட்டிகுளம் நாராயணசாமி தர்மபதியில் வைகாசி பெருந்திருவிழா

நெல்லை, மே 19:  பாளையஞ்செட்டிகுளம் நாராயணசாமி தர்மபதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பாளையஞ்செட்டிகுளம் நாராயணசாமி தர்மபதியில்  கடந்த 17ம்தேதி வைகாசி பெருந்திருவிழா கொடியற்றத்துடன் துவங்கியது. இன்று காலை  8 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம், மதியம் 12மணிக்கு அன்னதர்மம், மாலை 4மணிக்கு சுவாமி வாகனபவனி, நடக்கிறது. தொடர்ந்து தினமும் தீப அலங்கார பணிவிடை நடக்கிறது. 10ம்நாள் விழாவான வரும் 26ம்தேதி அதிகாலை 5மணிக்கு சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் சந்தன குடம் எடுத்தல், காலை 8மணிக்கு வாகனபவனி, மதியம் 1மணிக்கு அருள்வாக்கு, திருவிளையாடல், மாலை 4மணிக்கு வாகனபவனி பதியை சுற்றி வலம் வருதல் நடக்கிறது. மாலை 6மணிக்கு அன்னதர்மம், இரவு 9மணிக்கு இனிமம் வழங்குதல், இரவு 10மணிக்கு சுவாமி அருளாசி வழங்குதல்  நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நாராயணசாமி தர்மபதி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: