கோவை, மே 19:கோவை நகரில் போக்குவரத்து குறியீடுகளை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை நகரில், குறுகலான ரோடு, வாகன பெருக்கம், அதிவேகத்தினால் விபத்து அதிகரித்து வருகிறது. மாதந்ேதாறும் விபத்துகளில் 25 முதல் 35 பேர் வரை இறக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் விபத்தினால் 400 முதல் 450 பேர் வரை கை, கால், தலை காயத்தினால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அதிவேகம், கவனக்குறை, தரமற்ற ரோடுகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. நகரில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. பஸ், லாரி, சரக்கு வாகனங்களில் செல்பவர்கள் விதிமுறை மீறி செல்வதாலும், செல்போன்களை பேசிய படி வாகனங்களை இயக்குவதாலும் விபத்து ஏற்படுவதாக தெரிகிறது. மார்க்கெட், வணிக வளாகம் பகுதியில் கனரக வாகனங்கள் குறிப்பாக லாரிகள் அதிகமாக வந்து செல்கிறது. முக்கிய ரோடுகளில் வாகனங்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து செல்லவேண்டியுள்ளது. நெருக்கடி, அவசரம் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படுவதாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கூறுகின்றனர்.