பாப்பிரெட்டிப்பட்டி, மே 17: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்கு சாவடிகளில், வருகிற 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிபுதூர் ஆகிய வாக்குசாவடிகளில் முறைகேடு நடந்ததாக, திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடி மையங்களை, தர்மபுரி ஏடிஎஸ்பி சுஜாதா கடந்த வாரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.