தர்மபுரி, மே 17: தர்மபுரி நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்குமாறு, ேசலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், பிஆர்எம் காம்ளக்சில் ஐஸ்வர்யலட்சுமி பைனான்சியர்ஸ் என்ற நிதி நிறுவனத்தை மாதையன், அவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோர் நடத்தி வந்தனர். இதில் தஞ்சாவூர் நாஞ்சிக்ேகாட்டைரோடு பழனியப்பா நகர் குறுக்கு தெருவை சேர்ந்த ராஜாசுரேஷ்(50) என்பவர், ₹32 லட்சம் ெடபாசிட் செய்திருந்ததாகவும், இதனை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.