தர்மபுரி அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பலி

தர்மபுரி, மே 17: தர்மபுரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து முதியவர் பலி உயிரிழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் கதக் பகுதியை சேர்ந்தவர் நாகப்பா(75). இவர் தனது குடும்பத்தினர் 13 பேருடன், கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, நேற்று காலை தர்மபுரி மாவட்டம் வழியாக, வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். காலை 9 மணிக்கு அதியமான்கோட்டை, வெத்தலைகாரன்பள்ளம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்தது. இதில் நாகப்பா பலியானார். வேனில் வந்த 12  பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: