தர்மபுரி, மே 15: இண்டூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கழுத்து நெரித்து கொல்ல முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் இண்டூர் தலவாய்அள்ளி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (42). இவரது மனைவி வள்ளி (37). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதன்பின்னர் வள்ளி தூங்க சென்றார். திடீரென வள்ளியின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, வள்ளி சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார்.