காரிமங்கலம், மே 15: காரிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளுக்கு போதிய தண்ணீர் இல்லாததால், காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி, திண்டல், எலுமிச்சினஅள்ளி, கேத்தனஅள்ளி, பொம்மஅள்ளி, பேகாரஅள்ளி, நாகணம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பருமழை பொய்த்ததால், தண்ணீரின்றி கரும்புகள் அனைத்தும் காய்ந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.