அரூர், மே 8: அரூரில், பழுதடைந்த பொதுப்பணித்துறை குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டுமமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் பேரூராட்சியில் 11வது வார்டில் பொதுப்பணித்துறை சார்பில், 100 ஆண்டுக்கு முன்பு அரசு குடியிருப்பு கட்டப்பட்டது. அங்கு, 24 வீடுகள் கட்டப்பட்டது. வெளியூரிலிருந்து பணிக்கு வரும் அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்கென ஏற்படுத்தப்பட்ட குடியிருப்பில் 10 வீடுகள் மட்டுமே குடியிருப்பதற்கு ஏற்றதாக உள்ளது. மீதமுள்ள குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. இதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.