காரிமங்கலம், மே 8: காரிமங்கலத்தில் நகர வணிகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தர்மபுரி மாவட்டம் மற்றும் சேலம் மண்டல தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். காரிமங்கலம் நகர வணிகர் சங்க தலைவர் மாது வரவேற்றார். இதில், தர்மபுரி மாவட்ட செயலாளர் கிரிதர் மற்றும் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், வணிகர் சங்க செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கலந்து கொண்டார்.