அரூரில் கார் திருட்டு

அரூர், மே 8:  அரூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்னுரங்கம்(35). லாரி டிரைவரான இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன் ₹1.50 லட்சம் மதிப்பில்  பழைய கார் வாங்கினார். இதனை வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், வெளியே சென்று விட்டு காரை வழக்கம்போல் காலி இடத்தில் நிறுத்தியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, கார் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அரூர் போலீஸ் ஸ்டேஷனில், பொன்னுரங்கம்  புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: