தர்மபுரி, மே 7: திருச்சி மாவட்டம் முசிறி திருகலையூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(27). திருமணமாகாத இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில், அரூர் கோட்டப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மாரியப்பனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரியப்பனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டது.