பாலக்கோடு, மே 7: பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சி அல்ராஜூகவுண்டர் தெருவில் போதிய சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படுவதால், இப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும், மழை காலங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.