கடத்தூர் அருகே அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கடத்தூர், மே 1: கடத்தூர் அடுத்த மடதள்ளி கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து, பெண்கள் மாவிளக்கு மற்றும் பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர், கிராமத்தில் தொடக்கப்பள்ளியின் எதிரே உள்ள அம்பேத்கரின் சிலை மாலை அணிவித்து, மாவிளக்கு வைத்து, சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: