தர்மபுரி, மே 1: சென்னை சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பிளஸ்2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனிநபர் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குழு போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றிருக்க வேண்டும்.