பாலக்கோடு, ஏப்.28: பாலக்கோடு அருகே, பஞ்சப்பள்ளியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை பாலக்கோடு- மாரண்டஅள்ளி சாலையில் பஞ்சப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் காலி குடங்களுடன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.