அம்மன் கோயில் திருவிழா

கடவூர், ஏப்.26: பாலவிடுதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தூளிபட்டி காளியம்மன் கோவில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் பக்தர்கள் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், பறவைக் காவடி நிகழ்ச்சிகள் உள்பட பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக கரகம் கிணற்றில் விடும் நிகழ்ச்சி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

Related Stories: