சூலூர், ஏப். 25: அதிமுக ஆட்சியின் அவலங்களை வீடு தோறும் கொண்டு செல்லுங்கள் என சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி கூறினார். ேகாவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோைவ மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில், சூலூர் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.வ.வேலு பேசியதாவது:பெண்கள் மனது வைத்தால் எதுவும் செய்யலாம். குடும்பத்தை வழிநடத்துவதில் மட்டுமல்ல, எந்த ஒரு பணியையும் திறம்பட செய்யக்கூடியவர்கள் பெண்கள். வீடு தோறும் சென்று, பெண்களால் அதிகளவில் வாக்கு சேகரிக்க முடியும். மத்திய-மாநில அரசுகள், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டன. ஜிஎஸ்டி வரி காரணமாக விலைவாசி பலமடங்கு உயர்ந்துவிட்டது. சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் மளிகை பொருட்களை பாதி விலையில் மக்களுக்கு வழங்கியவர் தலைவர் கலைஞர். மகளிர் சுயஉதவி குழுவை ஆரம்பித்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தவர் கலைஞர். பல மணிநேரம் கால்கடுக்க நின்று, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுழல்நிதி வழங்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நமது வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வெற்றி பெற உங்கள் பங்கு சிறப்பானதாக அமைய வேண்டும்.