கரூர், ஏப் 24: அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 200 பேர் கொண்ட 58 குழுக்கள்அமைத்து சுழற்சி முறையில் சோதனை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் அன்ழகன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்றுநடைபெற்றது. பறக்கும் படை, நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழு, தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழுவினர் கலந்து கொண்டனர்.இதில் கலெக்டர் பேசுகையில்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 22ம்தேதி துவங்கியது. 29ம்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் நாள் 30ம்தேதி,. திரும்பப்பெறும் நாள் மே2ம்தேதி (வியாழன்), வாக்குப்பதிவு நாள் மே 19ம்தேதி (ஞாயிறு) வாக்கு எண்ணிக்கை 23ம்தேதி (வியாழன்) நடைபெறுகிறது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகளில் தலா 9பறக்கும்படை குழுக்கள், மூன்று நிலையாக நின்ற ஆய்வு செய்யும் குழுக்கள், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 9பறக்கும்படை குழுக்கள், 9நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்கள், 4தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழுக்கள் என 200பேர் கொண்ட 58 குழுக்கள்அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24மணிநேரமும் பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிறபகுதிகளில் இருந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குள் வருவதற்காக உள்ள 21வழிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.