கரூர் வடிவேல் நகர் பகுதியில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு

கரூர், ஏப்.23:  கரூர்கோவை சாலையில் வடிவேல்நகர் தங்கம்நகர் பகுதியில் குப்பைகள் அள்ளப்படவில்லை.இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் போதுமான ஏற்பாடுகள் இல்லாததால் உடனுக்குடன்அகற்றாமல் உள்ளனர். உள்ளாட்சித்தேர்தலை நடத்தாததால் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள்அவதிப்படுகின்றனர். குப்பை அகற்றுவது, குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வது போன்றவை அத்தியாவசிய பணிகள். இப்பணிகளை மேற்கொள்வதற்கும் கூட அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மேற்கோள்காட்டி தாமதப்படுத்துவதாக பொதுமக்கள்தெரிவித்தனர். குப்பைமேலண்மை பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: