மாவட்டம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் வழங்கினர்

தர்மபுரி, ஏப்.23: தர்மபுரி மாவட்டத்தில் 158 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படித்த 20, 013 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 17,935 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கியது. இதையொட்டி நேற்று தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் தங்களது பிளஸ்2 மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ்களை பெற்றோருடன் வந்திருந்து பெற்று சென்றனர். சான்றிதழ்களை பள்ளி தலைமையாசிரியர் தெரசாள் மாணவிகளுக்கு வழங்கினார்.

Related Stories: