குளித்தலை ஏப்.16: கரூர் மாவட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் குளித்தலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் ராமலிங்கம் பொய்கைபுத்தூர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகராஜன் வரவேற்றார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி பேசுகையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலும், டெல்லியிலும் பலகட்ட போராட்டங்கள் நடத்தி பிரதமர் சிறிதளவு கூட இரக்கம் இல்லாமல் பாராமுகமாக இருந்துவிட்டார். இதனால் தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்தோம்.இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என அறிவித்திருந்தார்.