பாலக்கோடு, ஏப்.10: பாலக்கோடு வேளாம்பட்டி பகுதியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக, வெள்ளிச்சந்தையில் இருந்து சுமார், 2 கி.மீ தொலைவில் உள்ள ேவளாம்பட்டி பகுதியில், அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பிரதான குழாயில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.