காரிமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலில் யுகாதி தேர் திருவிழா

காரிமங்கலம், ஏப்.8: காரிமங்கலம் மந்தைவீதி மகாசக்தி மாரியம்மன் கோயிலில் 40ம் ஆண்டு யுகாதி தேர் திருவிழா நடந்தது. காரிமங்கலம் மந்தைவீதியில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோயிலில், யுகாதி திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள் நீராட்டு, இரவு பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. நேற்று சிறப்பு அபிஷேகமும், கொடியிறக்கமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, காண்டலா சமூகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: