தர்மபுரி, ஏப்.5: தர்மபுரி மாவட்ட தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாமக அன்புமணி, அதிமுக கோவிந்தசாமி, மற்றும் சம்பத்குமாரை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இடைத் தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோரை ஆதரித்து, தர்மபுரி மாவட்டம் அரூர், கம்பைநல்லூர், ஜாலிப்புதூர், பொம்மிடி, சோலைக்கொட்டாய் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில், டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேகையில், தமிழகத்தில் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதிமுக தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நடைபெறும். ஆனால், இடைத் தேர்தலில் 10 தொகுதிகள் கூடுதலாக, 18 சட்ட பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.