2 இளம்பெண்கள் மாயம்

தர்மபுரி, ஏப்.4: தர்மபுரி கோட்டப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் மகள் சுமித்ரா(15). 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, ஈரோட்டில் உள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், கோயில் விழாவையொட்டி சுமித்ரா கோட்டப்பட்டிக்கு வந்தார். கடந்த 1ம் தேதி மாலை, கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சுமித்ரா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல், பென்னாகரம் போடூர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் கவுசல்யா(20), பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு சென்ற இவர், மீண்டும் திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், பென்னாகரம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: