புதுக்கோட்டை, மார்ச் 29: இரவோடு இரவாக ரகசியமாக அமைத்த கூட்டணி அல்ல. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டணி என்று நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் கூறினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த திருச்சி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னதாக புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.