அறந்தாங்கி பகுதியில் நெடுஞ்சாலை பணிகள் தரமாக நடந்ததா?

அறந்தாங்கி, மே 24: புதுக்கோட்டை நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலை மற்றும் பாலப் பணிகளை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப்பொறியாளர் செந்தில்குமார், சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் துரை, அறந்தாங்கி நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் உதவிக்கோட்டப் பொறியாளர் கிருஷ்னமூர்த்தி உள்ளிட்ட நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் கலந்து கொண்டனர். ஆய்வில் பாலம் மற்றும் சாலைப் பணிகளின் அளவீடுகள், தரம் மற்றும் உறுதித்தன்மையை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

The post அறந்தாங்கி பகுதியில் நெடுஞ்சாலை பணிகள் தரமாக நடந்ததா? appeared first on Dinakaran.

Related Stories: