பாலக்கோடு, மார்ச் 28: மாரண்டஅள்ளி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை ேபாலீசார் தேடி வருகின்றனர். மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவன்(52). இவர் மாரண்டஅள்ளியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். தினமும் பணியை முடித்து விட்டு, மது விற்பனையான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதை தேவன் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், பணியை முடித்து விட்டு இரவு 10.30 மணியளவில் வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வட்டகானம்பட்டி கூட்டுரோடு அருகே ெசன்ற போது, 2 டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள் இரவர், தேவனை வழிமறித்து மது விற்பனை செய்த பணத்தை கொடுக்கும்படி அவரை தாக்கினர்.