கடத்தூர் பஸ் ஸ்டாண்டில் வாக்காளர் விழிப்புணர்வு

கடத்தூர், மார்ச் 22: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்வது குறித்து, பொதுமக்களிடையே நோட்டீஸ் வழங்கியும், கரகாட்டம் மற்றும் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாப்பிரெட்டிபட்டி மண்டல தாசில்தார் மாதேஸ்வரன், ஆர்ஐ அருள்மொழி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Related Stories: