 கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தர்ஷன் விழா

கோவை, மார்ச் 21:கோவை குனியமுத்தூரில் உள்ள  கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தர்ஷன்-2019 கல்லூரி விழா நடந்தது. விழாவில், சிறப்பு விருந்தினராக  சென்னை ஜில்கெர் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தின் சேவை மேலாண்மை துறையினர் இயக்குனர் விக்னேஷ் மகாலிங்கம் மற்றும் அலைபேசி பயன்பாட்டு வளர்ச்சித்துறையின் இயக்குனர் சித்தார்த்குமார் பங்கேற்றனர்.  இதில், ஜில்கெர் நிறுவனத்தின் சேவை மேலாண்மை துறையின் இயக்குனர் விக்னேஷ் பேசுகையில், “இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக வர வேண்டும். தங்களின் விருப்பத்தை செயல்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் துவங்க தனித்து சிந்தித்து, செயல்பட வேண்டும். தொழில் துவங்க குழுவாக முயற்சி செய்வதை விட தனியாக செய்ய வேண்டும்” என்றார்.  இதில், இக்கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், கல்லூரி முதல்வர் ஜேனட், சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் மருதாச்சலம், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: