தர்மபுரியில் ₹73 ஆயிரம் பறிமுதல்

தர்மபுரி, மார்ச் 20: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் முறைகேடு நடக்காமல் இருக்க பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்ைகயில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை ₹12 லட்சம் வரை ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மதிகோண்பாளையம் சந்திப்பு பிரிவு சாலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்தனர். இதில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் ₹73 ஆயிரம் பணம் சிக்கியது. இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: