பாலக்கோடு அருகே வாகன தணிக்கையில் ₹1.90 லட்சம் பறிமுதல்

பாலக்கோடு, மார்ச் 19: பாலக்கோடு அருகே நடந்த வாகன தணிக்கையில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹1.90 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாலக்கோடு அருகே ஆரதஹள்ளி கூட்டு ரோடு  பகுதியில், தேர்தல் பறக்கும்படையினர் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஓசூரில் இருந்து காரிமங்கலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் ₹1.90 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்த காரிமங்கலம் அடுத்த கொல்லஅள்ளியை சேர்ந்த பிரபு(32), விஜய் (34) ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, அவர்கள் வெள்ளிப்பட்டறை நடத்தி வருவதாகவும், வெள்ளி பொருட்களை வாங்க பணம் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாலக்கோடு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: