பாலக்கோடு மார்ச் 19: பாலக்கோடு அருகே கூட்டாறு மற்றும் தொல்லைகாது என்னும் இடத்தில் புதிய அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு பகுதி மக்களின் முதன்மை தொழில் விவசாயமாகும். இப்பகுதியில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் கரும்பு, வாழை, தென்னை, பாக்கு, மாமரங்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் என உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை குறைவால் அணைகள், ஏரிகள், கிணறுகள் என வறண்டு காணப்படுகின்றது. நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றதால் விவசாயம் முற்றிலும் பொய்து போனது. இந்நிலையில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் பிழைப்பு தேடி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டிராக்டர் தண்ணீரை விலைக்கு ₹900 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.