காரிமங்கலம் , மார்ச் 8: காரிமங்கலம் ேபரூராட்சியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பல வார்டுகளில் கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை கால்வாய்கள் இல்லாததால், கழிவுநீர் வெளியேற வழியின்றி, ஆங்காங்கே சாலையோரத்தில் தேங்கி உள்ளது. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி சாலையில், பிடிஓ அலுவலகம் அருகே சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாமல், அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது.