காயல்பட்டினத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆறுமுகநேரி, மார்ச் 7: காயல்பட்டினத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.  காயல்பட்டினத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க தற்போது ஒருவழிப் பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரும் பாதையில் கூலக்கடை பஜார் பகுதியில் கடைகளுக்கு முன்பாக காணப்பட்ட ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கடைகளுக்கு வெளியே நீண்டு கொண்டிருந்த விளம்பரப் பலகைகளை அகற்றியதோடு 10க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பிருந்த ஆக்ரமிப்புகள் மற்றும் மரப்பலகைகளை அகற்றி நகராட்சி வாகனத்தில் கொண்டு சென்றனர்.

 நகராட்சி ஆணையாளர் முருகன், நகராட்சி பொறியாளர் சேகர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்திரகாளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு மேற்கொண்டனர்.

Related Stories: