தர்மபுரி, பிப்.28: தர்மபுரி மாவட்ட விடுதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி பயிற்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமிர்பாஷா முன்னிலை வகித்தார்.