வெள்ளியணை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கரூர், பிப். 26: 1981ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தமிழரசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைமையாசிரியர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். பள்ளி உதவி தலைமையாசிரியர் விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் தாங்கள் பயின்ற வகுப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர். மேலும் இளம் விஞ்ஞானிகள் குழுவினர் அறிவியல் ஆய்வகத்தை பார்வையிட்டு, மாவட்டம், மாநிலம்,

தென்னிந்திய, தேசிய அளவில் பங்கேற்று பரிசுகள் பெற்று வந்த 16 அறிவியல் கண்டு பிடிப்புகளையும், சர்வதேச அளவில் ஜப்பான், பின்லாந்து, சுவீடன் ஆகிய ெவளிநாடுகளுக்கு கல்வி பயணம் சென்று வந்த கிராமப்புற இளம் விஞ்ஞானி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களையும் பார்வையிட்டு பாராட்டினர்.

Related Stories: