பெரியாம்பட்டி அரசு பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை

தர்மபுரி, பிப்.22: காரிமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட பெரியாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ₹2.25 கோடி மதிப்பில் 12 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் பணியை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் தியாகராஜன், சக்திவேல், உதவி பொறியாளர் ராமசந்திரன், முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், செல்வராஜ், கோவிந்தராஜ், பெரியண்ணன், கூட்டுறவு சங்க இயக்குனர் ரவிசங்கர், தாசில்தார் கேசவமூர்த்தி, பிடிஓக்கள் வெங்கட்ரமணன், வடிவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: