கோவை, பிப்.20: கோவை வடவள்ளியை அடுத்த பாலகணேசபுரம் பொங்காளியூரை சேர்ந்தவர் முத்துசாமி ( 76). இவர் இடையர்பாளையம் செல்லும் வழியில் இ.பி.காலனியில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இடையர்பாளையம் பிரிவு அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி இறந்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கூலித்தொழிலாளி தற்கொலை