கரூர் ஜவஹர் பஜார் அருகே பைப் லைன் அமைக்க தோண்டிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், பிப். 20: கரூர் ஜவஹர் பஜார் அருகே பைப் லைன் அமைக்க தோண்டிய பள்ளத்தினை விரைந்து மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் நகரில் பிரதான முக்கிய வணிக வளாக சாலையாக ஜவஹர் பஜார் உள்ளது. மிக முக்கிய அனைத்து வர்த்தக கடைகளும் இந்த பஜாரில் உள்ளதால் அதிக போக்குவரத்து நடைபெறும் பஜாராக உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகம் எதிரே ஜவஹர் பஜாரில் குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

இதனால் பஜார் பகுதியில் இருந்து ஈஸ்வரன் கோயில், பிரதட்சணம் சாலை, பஸ் ஸ்டாண்ட் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் அனைத்து பயணிகளும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதன் எதிரே எந்த நேரமும் இரண்டு வழிப் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் இந்த பள்ளம் காரணமாக வாகனங்கள் சீராக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே இதனை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பள்ளத்தினை விரைந்து மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: