இஆர்கே பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

அரூர், பிப்.15:அரூர் அருகே எருமியாம்பட்டி இஆர்கே., மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இஆர்கே கல்வி நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் அருள்குமார் முன்னிலை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவடிவு சிறப்புரையாற்றினார். மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கண்காட்சியை தொடங்கி வைத்து ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பேசினார். இதில், 450க்கும் மேற்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அரங்குகளை மாணவர்கள் வைத்திருந்தனர். இதில் கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், செல்வம், ராமமூர்த்தி மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், புஷ்பா, சசிகலா, பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர். தலைமையாசிரியர் தீத்துமாலை நன்றி கூறினார்.

Related Stories: