தொண்டாமுத்தூர், பிப் 14: கோவை அருகே தொண்டாமுத்தூர் வழியாக பூண்டி, ஈஷா யோகாமையம், கல்லூரிகள், பள்ளி வேன்கள் டூரிஸ்ட் பஸ்கள் அதிகமாக வந்து செல்கின்றன. தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையம் முதல் சந்தைபேட்டை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஓட்டல்கள் அடுப்புகள் ரோட்டில் வைக்கப்பட்டு உள்ளதும், கடைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையோரம் உள்ள ஆக்ரமிப்புகளை தாங்களாவே அகற்றவேண்டும் என கெடு விடுத்தனர். பெட்டிகடைகள் வைத்திருப்போர் மற்றும் கடை முன்பு இருந்த தகர சீட்டுகளை தாங்களாவே அப்புறப்படுத்தினர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாராபட்சம் காட்டுவதாகவும், முறையாக சர்வே ெசய்து அளந்து பிறகு அகற்றுமாறு கட்டிட உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.