கோவை, பிப்.14: கோவை அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பார்க்க வரும் உறவினர்களின் உடமைகள் அவ்வப்போது காணாமல் போனது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அனைத்து வார்டுகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில் நேற்று காலையில், முழு உடல் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கும் வார்டில் இருந்த ஒரு பெண்ணிடம் ஒருவர் பையை திருடி கொண்டு தப்பி ஓட முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சல் போட்டார்.