பிஎஸ்ஏ கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி சோலைக்கொட்டாய் பிஎஸ்ஏ கல்வியியல் (பி.எட்) கல்லூரியில், கற்பித்தலில் புதுமையும் சமூக முன்னேற்றமும் பற்றி ஒருநாள் கருத்தரங்கு நடந்தது. பிஎஸ்ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் ஸ்ரீ லட்சுமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலாஜி முன்னிலை வகித்தார். குருகுல கல்வி முறையும் இன்றைய நவீன கல்வி முறையும் பற்றிய தகவல்கள் விரிவாக எடுத்தரைக்கப்பட்டது. வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிஎஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் தமிழரசன், கதிரவன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: